புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, May 21, 2004

முல்லை மருத்துவமனையில் ஏ.ஆர்.வி. தடுப்பூசி இல்லை

முல்லை மாவட்ட வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கான தடுப்பூசி மருந்து ஏ.ஆர்.வி. இன்மையால் விசர் நாய்க்கடிக்கு இலக்காவோர் பெரும் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் விசர் நாய்க்கடிக்கு இலக்கானவர்கள் தனியார் மருத்துவ மனைகளையே நாடவேண்டிய இக்கட்டான சூழ்நிலை காணப்படுகின்றது. மிகவும் வறுமைக்கோட்டில் உள்ள பொது மக்கள் இதனால் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர்

வன்னியிலிருந்து கிருபா
19.5.2004
நன்றி: ஈழநாதம்