புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, May 17, 2004

நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 50 பேர் வருகை

இராணுவ நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் இந்தியாவின் திருச்சி மாவட்ட நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 50 தமிழர்கள் நேற்று முன்தினம் மன்னார் பகுதிக்கு வந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கிளம்பிய இவர்களை இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் மணல் திட்டி எனும் பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும், பேசாலை மீனவர்கள் இவர்களை கரைக்கு கொண்டு வந்ததாகவும் அப்பொழுது பொலிசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களை நீதவான் சொந்த இடங்களுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டுள்ளார். இவர்கள் மன்னார் பேசாலை, தலைமன்னார், தோப்பூர், வவுனியா செட்டிக்குளம், யாழ். இளவாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து மகாமுனி
15.5.2004
nantri-Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home