புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, April 25, 2004

சாவகச்சேரி நகரப்பகுதியில் முஸ்லிம்கள் மீளக்குடியமர முடியாத நிலை

சாவகச்சேரி நகரப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களது குடியிருப்புக்களிலிருந்து படையினர் வெளியேற மறுத்துவருவதால் மீளக்குடியமர வந்திருந்த முஸ்லிம் குடும்பங்கள் தொடர்ந்து அகதி வாழ்க்கையினை வாழவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் மீளக்குடியமர வந்த குடும்பங்கள் தற்போது சாவகச்சேரி ஐ_ம்மா பள்ளிவாசலில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியிலிருந்து மீளக்குடியமர வந்த ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களை அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்ப படைத்தரப்பு அனுமதித்திருக்கவில்லை என தென்மராட்சி பிரதேச செயலர் யாழ். படைத்தலைமைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டின் இறுதியில் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் படிப்படியாகத் தற்போது மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக யாழ் நகரை அண்டியுள்ள முஸ்லிம் பகுதிகளிலும் இந்தக் குடும்பங்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றன. இவ்வாறு சாவகச்சேரி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் பகுதியில் வசித்துவந்த இந்த முஸ்லிம் குடும்பங்களே தற்போது மீளக்குடியமரும் நோக்கில் சாவகச்சேரி திரும்பியுள்ளனர்.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004

0 Comments:

Post a Comment

<< Home