புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, April 25, 2004

77 நலன்புரி நிலையங்களில் 10,938 பேர் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்

யாழ். குடாநாட்டில் உள்ள 77 நலன்புரி நிலையங்களில் 10,938 பேர் அகதிகளாக வாழ்வதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டில் நல்லூர் பிரதேசத்தில் மூன்று நலன்புரி நிலையங்களும், சண்டிலிப்பாயில் 15 நலன்புரி நிலையங்களும், சங்கானையில் 17 நலன்புரி நிலையங்களும், உடுவிலில் 11 நலன்புரி நிலையங்களும், தெல்லிப்பipயில் 5 நலன்புரி நிலையங்களும், கரவெட்டியில் 1 நலன்புரி நிலையமும், பருத்தித்துறையில் 15 நலன்புரி நிலையங்களும், மருதங்கேணியில் 6 நலன்புரி நிலையங்;களும் உள்ளன.

இவற்றில் நல்லு}ரில் 25 குடும்பங்களும், சண்டிலிப்பாயில் 291 குடும்பங்களும், சங்கானையில் 483 குடும்பங்களும், உடுவிலில் 380 குடும்பங்களும், கோப்பாயில் 198 குடும்பங்கம், கரவெட்டியில் 17 குடும்பங்களும், மருதங்கேணியில் 142 குடம்பங்களும் அப்பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் பாதுகாப்பு வலயத்தின் காரணமாக 2370 குடும்பங்களைச் சேர்ந்த 9289 பேர் அகதிகளாக நலன்புரி நிலையங்களில் வாழ்வதாக அப்புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004

0 Comments:

Post a Comment

<< Home