புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, April 28, 2004

மட்டு. மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள 37 கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்கு இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

முக்கியமாக காக்காச்சிவெட்டை, ஓமடியாவடு பெரிய புல்லுமலை, வெல்லாவெளி, வவுணதீவு ஆகிய பகுதிகளிலேயே கூடுதலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
25.4.2004

0 Comments:

Post a Comment

<< Home