புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, April 25, 2004

தமிழ்நாட்டில் திருமணம் செய்த 50 ஜோடிகளுக்கு வவுனியாவில் பதிவுத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நாடு அகதி முகாமில் தங்கியிருந்த போது திருமணம் செய்துகொண்ட 50 ஜோடிகளுக்கு வவுனியாவில் இன்று பதிவுத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தரானிகராலய வவுனியாக் கிளை அலுவலகத்தின் ஏற்பாட்டில் தமிழ் மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் இவர்களுக்குரிய பதிவுத்திருமணம் சட்டபூர்வமாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பதிவாளர் திருமதி எஸ்.இராசரத்தினம் திருமணப் பதிவுகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் யு.என்.எச்.சி.ஆர். சிரேஷ்ட உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தமிழ்நாட்டில் பிறந்து நாடு திரும்பியுள்ள குழந்தைகளுக்கான பிறப்பு அத்தாட்சிப் பதிவுகளும், இங்கு நடத்தப்பட்டன.

நாடு திரும்பிய அகதிகளுடைய நலன் கருதி இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி விஐலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
24.4.2004

0 Comments:

Post a Comment

<< Home