புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, May 13, 2004

யுத்தத்தின் முலம் மக்களின் உணர்வுகள் மட்டுமல்ல அழிக்கப்பட்ட வரலாறுகளுமே எமக்கு சிறிலங்கா அரசு கொடுத்த பரிசு: சோ.தங்கன்

20 வருட காலத்திற்கு மேற்பட்ட யுத்த காலத்தில் எங்களுடைய மக்களின் உணர்வுகள் மட்டுமல்ல, மக்கள் வாழ்ந்த பிரதேசங்களையும் அவர்களுடைய சொத்துக்களும், உடமைகளும் அழிக்கப்பட்ட வரலாறுகளே எமது மக்களுக்கு சிறிலங்கா அரசு கொடுத்த பரிசாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் நோயாளர் விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகiயில், நீண்டதொரு துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்தே துயரத்தோடு வாழ்ந்த எமது மக்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களை அனுபவித்து வந்தனர்.

இந்த யுத்தம் எங்களுடைய தேசத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. அதற்கு ஆதாரமாக கிளிநொச்சி வைத்தியசாலை ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. இந்த வைத்தியசாலையில் எமது மக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்த சம்பவம் இந்த வைத்தியசாலைக்கு ஏற்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா பிரதி மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

பொதுச்சுடரினை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நோயாளர் விடுதியினை இலங்கைக்கான ஜப்பானிய து}துவர் அக்கியோசூடா அவர்களும், மகப்பேற்று விடுதியினை அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவர்களும் திறந்து வைத்தனர்.

வன்னியிலிருந்து கிருபா
12.5.2004

0 Comments:

Post a Comment

<< Home