புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, April 25, 2004

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிப்பு

தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் விடுவிக்கப்பட்ட கைதடி, நாவற்குழி, மறவன்புலோ ஆகிய பகுதிகளில் மக்கள் மீளச்சென்று குடியேறுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட போதும் அப்பகுதி வீடுகளை துப்பரவு செய்யவோ, அல்லது பற்றைக்காடுகளை அழிக்கவோ அல்லது தீயிடவோ படையினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களை அடுத்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்களில் இப்பகுதியில் 100 குடும்பங்களையே படைதரப்பு மீளக்குடியேற அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், தென்மராட்சி தெற்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் மையப்பகுதியான தளங்கிளப்பில் இடம்பெயர்ந்த 12 குடும்பங்களையும் இதுவரை படையினர் மீளக்குடியேற அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பகுதிகள் படிப்படியாக படையினரால் மீள கையளிக்கப்படும் என படைத்தரப்பால் கூறப்படுகின்ற போதிலும் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு படைத்தரப்பு பின்னடிப்பதால் மக்கள் அங்கு சென்று குடியேறுவதற்கு வழிசமைக்குமா என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004

0 Comments:

Post a Comment

<< Home