புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, May 13, 2004

கடற்றொழில் துறையை மேம்படுத்த முல்லையில் யு.என்.டி.பி. உதவி

முல்லை மாவட்டத்தில் யு.என்.டி.பி. நிறுவனம் 2003 ஆம் ஆண்டு திட்டத்தில் சுமார் 26 மில்லியன் ரூபா கடற்றொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது சுமார் 12 மில்லியன் ரூபா பெறுமதியான கடல் தொழில் உபகரணங்களும் 14 மில்லியன் ரூபா முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்டது.

அதில் மீன், இறால் குளிரூட்டப்பட்டு பாதுகாப்பாக ஏற்றுமதி செய்யப்பயன்படும் மூன்று வாகனங்கள் ஒரு பாரஊர்தி 9 மோட்டார் சைக்கிள்கள் 3 போட்டோ பிரதி இயந்திரங்கள் 3 கணினிகள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் கடற்றொளிலாளர்களை மேம்படுத்துவதற்கு இந்நிறுவனம் உதவி வளங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஜ வன்னியிலிருந்து கிருபா
12.5.2004
நன்றி: ஈழநாதம்

0 Comments:

Post a Comment

<< Home