புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, April 28, 2004

திருக்கேதீஸ்வரத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் 50 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் 50 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.

தலா 20 பேர்ச் கொண்ட இந்த காணித்துண்டுகளை 50 பேருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

யுத்த காலத்தின் போது திருக்கேதீஸ்வர ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 500 பேர்வரை வசித்ததாக பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணித்துண்டுகளுக்காக 150 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 50 பேருக்கே தற்போது காணித்துண்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் பிரதேச செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
26.4.2004

0 Comments:

Post a Comment

<< Home