புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, May 17, 2004

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மருத்துவ உபகரணத் தொகுதியொன்றினை வவுனியா அரச அலுவலகத்தில் வழங்கியுள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களுக்குமான மருத்துவ உபகரணத் தொகுதியொன்று வவுனியா அரச அலுவலகத்தில் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

ஒபரேசன் யு.எஸ்.ஏ. என்ற நிறுவனத்தினால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக வழங்கப்பட்டுள்ள இந்த மருத்துவ உபகரணங்களின் பெறுமதி 11 மில்லியன் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மாவட்ட சுகாதார அதிகாரிகளும், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து அங்கு கொண்டு செல்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினர் ஆறு இலட்சம் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

16.5.2004
nantri-Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home