புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, May 17, 2004

ஆழியவளையில் தியாக தீபம் திலீபன் மருத்துவனை புதிய கட்டிடத் திறப்பு விழா

இராணுவக் கட்டுப்பாடற்ற வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபன் மருத்துவமனையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும், இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

வடமாராட்சி இராணுவக் கட்டுப்பாடற்ற மக்களின் சுகாதார வைத்திய தேவைகளின் மகத்துவத்தை உணர்ந்து தியாகி திலீபனின் மருத்துவ சேவையினர் புதிய கட்டிடம் ஒன்றையும், நிறைவான தேவைகளையும் வழங்க முன்வந்துள்ளனர்.

அரசாங்க வைத்திய சேவைகளற்ற இந்த பிரதேசத்தில் திலீபன் மருத்துவமனை மீளக்குடியேறியிருக்கின்ற மக்களின் வைத்திய வசதிகளை இலவசமாக எந்த நேரமும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து எழின்மதி
16.5.2004

0 Comments:

Post a Comment

<< Home