புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, December 07, 2003

யாழ். குடாநாட்டில் இயல்புவாழ்க்கை திரும்பும்வரை புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம்.
யாழ். புனர்வாழ்வுக் கிளை அலுவலகம் வெளிநாடுகளிடம் கோரிக்கை

யாழ். குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களை தமிழர் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என யாழ்ப்பாணம் அரச செயலகத்தில் இயங்கும் புனர்வாழ்வுக் கிளை அலுவலகம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலய நடவடிக்கைகளும் இராணுவ நெருக்கு வாரங்களும் பெருந்தடையாகவுள்ளன. இத்தகைய நெருக்கு வாரங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னரும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் இங்கு நிலைமை சுமுகமாக இருப்பதாகவும் அவர்களை இங்கு திருப்பி அனுப்பலாம் எனவும் கூறி வருகின்றனர். ஆயினும் நிலைமை அப்படியல்ல.

எனவே வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமுல் செய்ய வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மாறன்-ஈழம்
06.12.2003

நன்றி: வீரகேசரி

0 Comments:

Post a Comment

<< Home