புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, November 11, 2003

யுத்த நிறுத்தத்தின் பின்னர், மட்டுநகர் பகுதியில் 5000க்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்வு
யாழிலிருந்து எழின்மதி-திங்கட்கிழமை, 10.11.2003, 20:04 ஈழம்

போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப் பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,734 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுக்கழகத் திட்டப்பணிப்பாளர் எஸ். ஜெயராம் தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை மற்றும் இன வன்முறைகள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மட்டக்களப்பின் 12 உதவி அரச அதிபர் பிரிவுகளான வெல்லாவெளி, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுணதீவு, வாழைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி, கோரளைப்பற்றுமத்தி, ஏறாவூர், செங்கலடி, கிரான், களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 5,734 குடும்பங்களே தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ளன.

நன்றி-eelampage.com

0 Comments:

Post a Comment

<< Home