புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, November 15, 2003

பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனத்தினரால் போரினால் பாதிப்படைந்த பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது
யாழிலிருந்து எழின்மதி - வியாழக்கிழமை, 13.11.2003, 19:37 ஈழம்

வன்னியில் இயங்கிவரும் இவ் அமைப்பானது வன்னியில் போர் அனர்த்தங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மேம்படுத்தும் பொருட்டு வெற்றிமனை உளவளத்துணை நிலையம், பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், உதயதாரகை தும்புத் தொழிற்சாலை, மலர்ச் சோலை உளவளத் துணை நிலையம் என்பனவற்றையும் முல்லைத்தீவில் 93 சிறுவர்களைக் கொண்டு செந்தளிர் சிறுவர் இல்லத்தினையும் நடாத்திவருகின்றது.

இவ்வாண்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, கோண்டாவில்ப் பகுதியில் தனது கிளையினை. நிறுவியுள்ளதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சேகரித்து அதன் மூலம் உதவித்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

நன்றி-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home