புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, November 15, 2003

வில்பத்து காட்டுப் பகுதியைப் புனரமைக்க இத்தாலிய தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று இணங்கியுள்ளது
காவலூர் கவிதன் - வெள்ளிக்கிழமை, 14 .11.2003, 3:37 ஈழம்

இதனடிப்படையில் 4 மில்லியன் யூரோ செலவில், வில்பத்து காட்டுப் பகுதியும், அங்கே காணப்படும் வனவிலங்குகள் பாதுகாப்பும் மீளாய்வு செய்யப்படுவதுடன், புதுப்பிக்கப் படவுமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தொடரும் ஆறு ஆண்டுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, இப்புனரமைப்புப் பணிக்கான நிதியுதவியை வழங்குமென்றும், அடுத்த மாதம் இப்பணிகளை ஆரம்பிக்க, இத்தாலியிலுள்ள தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருவதாகவும் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரி எச்.எம்.டி.சி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

நன்றி-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home