புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, November 09, 2003

தென்மராட்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இன்று சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர் வாழ்வுக்கழக யாழ். மாவட்ட கிளை நிறுவனமான தென்மராட்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இன்று சாசகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியின் ஐயா கடைச் சந்தப் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சங்கானை கிராம சேவையாளர் வேலாயுதம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர்களை தென்மராட்சிக் கோட் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கலைவாணன், சாவகச்சேரி ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி அருளானந்தம் உட்பட பலர் ஏற்றி வைத்தனர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழக் கொடியினை யாழ்.மாவட்ட தமிழர் புனர் வாழ்க்கழகப் பொறுப்பாளர் ஜெயராஜ் ஏற்றி வைத்தார்.

அடுத்து பெயர்ப்பலகையினை திரைநீக்கம் இடம்பெற்ற பின்னர் தொடர்ந்து கட்டடத்தினை தென்மராட்சி பிரதேச செயலர் சிறீனிவாசன் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.

கொழும்பிலிருந்து சேரலாதன் 7.11.2003
nantri-eelampage

0 Comments:

Post a Comment

<< Home