புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, November 09, 2003

தமிழர் தாயகப் பகுதிகளில் அமைந்துள்ள பாலங்களை போரின்பொழுது அரசு திட்டமிட்டு அழித்துள்ளது.

தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படை நடவடிக்கைகளின் போது பல பாலங்கள் படையினரால் தகர்க்கபட்டுள்ளதாக புள்ளி விபரம் ஒன்றில் தெரிவிக்கபட்டுள்ளது.

தகர்க்கபட்ட பாலங்களில் சில பாலங்கள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. பல பாலங்கள் இதுவரை திருத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளன.

பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து பாலங்களை திருத்தம் செய்யும் பணி தாமதமாகியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானதை அடுத்து படையினரால் தகர்க்கபட்ட பாலங்களை திருத்தியமைக்கும் பணிகளை பல நிறுவனங்கள் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும் இதுவரையில் சில பாலங்கள் மட்டுமே திருத்தியமைக்கபட்டுள்ளன. ஏனையவை திருத்தியமைக்கப்படாத நிலையிலேயே உள்ளன.

இந்நிலை தொடருமானால் பாலங்களைக் கடந்து பயணம் செய்யும் மக்களும் ஊர்திகளும் பலத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கபட்டுகின்றது.

nantri-eelampage

0 Comments:

Post a Comment

<< Home