புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, November 09, 2003

யாழ் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல புனரமைப்பு

யாழ் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல புனரமைப்பு தீவகப் பொது அமைப்புக்களின் துணையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1991ம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஆண்டு முதல் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கபட்டு வருகின்றது என தீவக அரசியற்றுறைக் கோட்டப் பொறுப்பாளர் அருந்தவம் தெரிவித்துள்ளார்.

தீவகத்தின் அல்லைப்பிட்டி, துறையூர், அம்பிகைநகர், மெரிஞ்சிமுனை, தம்பாட்டி, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலயம், வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் என்பன இணைந்து தற்போது புனரமைப்புப் பணியினை மேற்கொண்டுள்ளன.

தற்போது அங்கு வித்துடல்கள் விதைக்கபட்ட நான்கு கல்லறைகளும் 135 நினைவுக்கற்களும் அமைக்கப்பட்டுள்ளன.

nantri-eelampage

0 Comments:

Post a Comment

<< Home