புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, November 10, 2003

27 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் விடப்பட்டுள்ள இரணைமடுக்குளம்
யாழிலிருந்து எழின்மதி ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2003, 21:17 ஈழம்

வட பகுதியின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளம் கடந்த 27 ஆண்டுகளாக எதுவித புனரமைப்புக்கும்உட்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

1866ம் ஆண்டு அமைக்கபட்ட இக்குளம், 1920ம் ஆண்டு 22அடி நீர்மட்டத்திற்கும், 1948ஆம் ஆண்டு 28அடி நீர்மட்டத்திற்கும், 1952ஆம் ஆண்டு 30 அடி நீர்மட்டத்திற்கும், 1977ம் ஆண்டு 34 அடி நீர்மட்டத்திற்கும் என புனரமைப்புச் செய்யபட்டது.

இறுதியாக 1977ஆம் ஆண்டு புனரமைக்கபட்டதற்குப் பின்னர் இதுவரை இந்தக் குளம் எதுவித புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளப் புனரமைப்பிற்காக ஸ்ரீலங்கா அரசோ அல்லது தனியார் நிறுவனஙகள் எதுவுமே முன்வரவில்லை என உரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக்குளத்தின் கீழ் 21,985 ஏக்கர் நிலப்பரப்பு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அது இப்போது புனரமைப்புக்கு உட்படுத்தப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home