புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, October 28, 2003

கடந்த காலப் போர் காரணமாக கடற்தொழிலாளர்கள் பொருண்மிய இழப்பினை எதிர் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்களே இவ்வாறு பெருமளவு பொருண்மிய இழப்பை எதிர்கொண்டுள்ளனர். தற்போதய சூழலில் இவர்களது சுயசார்புப் பொருண்மியத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும் என மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப்
பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரைவலைத தொழிலாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய போதே கௌசல்யன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லு}ரியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 180 கரைவலைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமது தொழில் சார்ந்த பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள் -25.10.2003
nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home