புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, September 24, 2003

புத்தளம் - திருமலை பெருந்தெருவை அமைக்க கொரியா நிதியுதவி
காவலூர் கவிதன் - புதன்கிழமை, 24 செப்ரெம்பர் 2003, 2:05 ஈழம்

கொரியன் சர்வதேச நிறுவனமும் இலங்கை வீதிப் புனரமைப்பு அதிகார பீடமும் கைச்சாத்திட்ட மேற்படி திட்டத்தின்படி, இவ்வருடம் நொவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இப்பெருந்தெருவிற்கான புனரமைப்புப்பணி, 12 மாதங்களில் நிறைவுறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

1.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 176 கிலோமீற்றர் நீளமுள்ள ஏ-12 பெருந்தெருவையே, கொரிய குடியரசு அமைத்துத்தர இணங்கியுள்ளது. இதன்படி, இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள இறுதித் திட்டமிடல் பணிகள், நொவம்பர் மாதம் வரை சென்று, நொவம்பரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home