புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, October 28, 2003

வெண்புறா செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனம் 255 செயற்கை கால்களை வழங்கியுள்ளது

வெண்புறா செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனம் புதிய தொழில் நுட்பத்தில் 255 செயற்கை;கால்களை இதுவரை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் வெண்புறா நிறுவனம் சிறிலங்கா அரசு வன்னி மீது விதித்திருந்த தடைகளால் போதிய பொருத்தமான வளங்கள் இன்மையால் பழைய தொழில் நுட்பத்தினாலான பாரம் கூடிய குறுகிய கால பயன்பாட்டுக்குரியதுமான கால்களையே உற்பத்தி செய்து வந்தது.

இப்பொழுது நீண்ட காலத்துக்கு பயன்படுத்தக் கூடிய செயற்கைக்கால்களை வெண்புறா நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. பாரம் குறைந்த பிளாஸ்டிக்கிலால் ஆன இக்கால்கள் இவ்வாண்டில் இதுவரை 255 உற்பத்தி செய்யப்ட்டுள்ளன.

இந்த முயற்சிகளுக்கு லண்டன் தமிழர் புனர்வாழ்வுக்கழகக் கிளை உதவிகளை வழங்கி வருகின்றது.

யாழிலிருந்து எழின்மதி
22.10.03
nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home