புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, October 30, 2003

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்தை வளர்க்கும் திட்டங்கள் அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட தமிழர்புனர்வாழ்வுக் கழகம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகியன இணைந்து எக்கோ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் பொதுச் சுகாதாரத்தைப் பேணும் வகையில் 30 புதிய மலசல கூடங்களையும் 25 பொதுக் கிணறுகளையும் புனரமைக்கவுள்ளன.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுகளில் உள்ள பொது இடங்களில் 30 புதிய மலசல கூடங்களையும் அமைப்பதோடு 25 பொதுக்கிணறுகளையும் புனரமைத்து வருகின்றது.

யாழிலிருந்து எழின்மதி
29.10.2003

0 Comments:

Post a Comment

<< Home