புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, September 17, 2003

வவுனியா வடக்கு கோரமோட்டை அ. த. க பாடசாலை புனரமைப்பை நிறுத்த உத்தரவு.
யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:45 ஈழம்

சிறிலங்கா இராணுவத்தின் படை நடவடிக்கையால் சேதமடைந்த வவுனியா வடக்கு கோரமோட்டை அ. த. க பாடசாலையை மீள இயங்கச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

அக்கிராம மக்கள் மேற்கொண்ட கடும் முயற்சியினால் அப்பாடசாலையை மீளமைக்க கல்வி அமைச்சு நிதியுதவி அளிக்க இணக்கம் தெரிவித்தது. இதனை அடுத்து மக்கள்; புனரமைப்புப் பணியை ஆரம்பித்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் அப்பணிகளை நிறுததுமாறு உத்தரவிட்டுள்ளார். கோரமோட்டையில் மக்கள் கூடியளவு மீளக் குடியமரவில்லை என்று அதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாடசாலை இயங்காத காரணத்தினால் தான் தாம் மீளக் குடியமர முடியாதுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இத்தடை குறி;த்து விசனம் தெரிவிக்கின்றனர். முக்கள் மீளக் குடியமர்ந்து வரும் பகுதிகளில் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்கள் நிரந்தரமாக இயங்க வேண்தும் எனப் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

nantri - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home