புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, September 17, 2003

இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை விளக்கி ஐ.நா.வுக்கு ஒரு இலட்சம் கையெழுத்துக்கள்
யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:39 ஈழம்

யாழ். குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை விளக்கி ஒரு இலட்சம் கையெழுத்துடனான மகஜரை ஐ.நா. செயலாளருக்கு அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற வலி. வடக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் ஐ.நா. சபையில் எதிர்வரும் 26ம் திகதி பிரதமர் ரணல் விக்கிரமசிங்க உரையாற்றுவதற்கு முன்பாக ஒரு இலட்சம் கையெழுத்துடனான மகஜரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் மீள்க் குடியமர்வதற்கான நடவடிக்கைகளை அரசு புறக்கணிப்பதனையும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை படையினர் மீண்டும் ஆக்கிரமிப்பதையும் சுட்டிக் காட்டி அம்மகஜர் அனுப்பப்படும். இதற்கான கையெழுத்துக்கள் பெறும் நடவடிக்கை புதன்கிழமை ஆரம்பமாகிறது.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் தமது இடங்களில் குடியமர சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்ககை எடுக்காவிடில் எமது சொந்த அடங்களில் நாம் அத்துமீறிக் குடியமர்வோம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களின் சமாசத் தலைவர் கே. கணேஷ் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு கல்லோயா, திருகோணமலை மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சிங்கள மக்களை மீளக் குடியமர்த்தும் சிறிலங்கா அரசு எமது பகுதிகளில் எம்மைத் தடுத்து வருகின்றது என அவர் மேலும் விசனம் தெரிவித்தார்.

nantri - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home