புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, December 23, 2004

இயற்கை சீற்றத்தில் தமிழர் தாயகம்

கனடிய தமிழ் வானொலி மூலம் 72,225 கனடிய டொலர் நிதி உதவி!!
18.12.2004

கடந்த சில நாட்களாக தமிழர் தாயகத்தில் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கனடிய தமிழ் வானொலி மூலம் நேயர்கள், வர்த்தக நிறுவனங்கள், கலைஞர்கள், இணைந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் 17ம் திகதி வெள்ளி இரவு 9:00 மணிவரை கனடிய தமிழ் வானொலியின் கலையகத்திற்கு வந்து சேர்ந்த நிதியான 72,225 கனடிய டொலர்களை முதற்கட்டமாக துரித பணமாற்று சேவைய10டாக நேரடியாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அனுப்பப்பட்ட நிதி 60 லட்சம் இலங்கை ரூபாய்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொழும்பில் கையளிக்கப்பட்டது.

இந் நிதியில் கொழும்பிலிருந்து உடனடியாக பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்படுகின்றன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிப்பாளர் றெஜி கனடியத் தமிழ் மக்களிற்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இங்கு சேகரிக்கப்படும் நிதி தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கருணை உள்ளம் படைத்த கனடிய மக்களிற்கு கனடியத் தமிழ் வானொலி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Quelle - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home