புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, August 07, 2003

யுத்தத்தினால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயாந்ததாக ஐக்கியநாடுகள் அமைப்பு கூறுகிறது

யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரில் மூன்று லட்சத்து 11ஆயிரத்து 202 பேர் தமது சொந்த இடங்களில் அல்லது வேறு இடங்களில் குடியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறுகின்றது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையே இதற்கு காரணம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் வெடித்த பின்னர் கடந்த வருடம் வரை குறைந்தபட்சம் ஆறு லட்சத்து 13 ஆயிரத்து 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home