புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, August 07, 2003

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இடைத்தங்கல் முகாம் ஒன்றை ஆயித்திய மலையில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று யுனிசெப் உதவியுடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் ஆயித்திய மலையில் நடாத்தப் பட்டது. அதன் போது தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.கே.பி.றெஜி அவர்கள் மங்களவிளக்கை ஏற்றி வைக்க மட்டு. திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருள் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அவர்கள் அடிக்கல்லை நாட்டினார். புலிகளின் சிறப்புத்தளபதி திரு. ரமேஸ் அவர்கள் உரையாற்றினார்.
புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.றெஜி அவர்கள் மங்களவிளக்கேற்றுவதையும், மட்டு. திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருள் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அவர்கள் அடிக்கல் நாட்டுவதையும் புலிகளின் சிறப்புத்தளபதி ரமேஸ் அவர்கள் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

0 Comments:

Post a Comment

<< Home