புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, August 01, 2003

சங்கானை, மருதங்கேணியைச் சேர்ந்த 1049
குடும்பங்களுக்கு மீள் குடியமர்வு கொடுப்பனவு



யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சங்கானை, மருதங்கேணி, தென்மராட்சி, கரவெட்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 1049 குடும்பங்களுக்கு மீள் குடியமர்வுக் கொடுப்பனவாகிய 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதன்படி சங்கானையில் 166 குடும்பங்களுக்கும், மருதங்கேணியில் 655 குடும்பங்களுக்கும், தென்மராட்சியில் 149 குடும்பங்களுக்கும், கரவெட்டியில் 79 குடும்பங்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

இதனைத் தவிர ஏற்கனவே 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து யாழ். குடாநாட்டில் மொத்தம் 7 ஆயிரத்து 49 குடும்பங்கள் இக்கொடுப்பனவைப் பெற்று விட்ட நிலை ஏற்படும்.

இதேசமயம் இன்னமும் குடாநாட்டில் 33 ஆயிரம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:

Post a Comment

<< Home