புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, March 03, 2004

தகவல் தொழில் நுட்பப் பூங்கா யாழ்.செயலகப்பொறுப்பில்

வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காவை யாழ். செயலகம் பொறுப்பேற்றுள்ளது.
ஸ்ரான்லி வீதியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா அரச நிறுவனமாகச் செயற்பட்டது.
வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபை செயலிழந்ததுடன் இந்தப் பூங்காவை நடத்துவதற்கான உதவிகளும் நிறுத்தப்பட்டன.
அரச உதவிகள் கிடைக்காததால், இந்த நிறுவனம் நடத்தும் கற்கை நெறிகள் மூலம் கிட்டும் நிதி மூலமே பணிகளை மேற்கொள்ளவேண்டி யுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ். செயலகத்தின் மேற்பார்வையில் இந்த நிறுவனம் தற்சமயம் செயற்படுகின்றது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான சான்றிதழ்கள் யாழ். அரச அதிபரால் வழங்கப்படுகின்றன.

Quelle - Uthayan

0 Comments:

Post a Comment

<< Home