புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, March 03, 2004

மட்டக்களப்பு மாவடத்திற்கு விசேட கல்வி சலுகைகள் வழங்கக் கோரி மனித சங்கிலிப் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி விஷேட சலுகைகளை வழங்குமாறு கோரி இன்று காலை இரண்டு மணிநேர மனித சங்கிலிப் பேராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையில் வீதியின் இரு மருங்கிலும் ஒன்று சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சுலோகங்களை ஏந்தியவாறு மனித சங்கிலி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட மாணவர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் முன்னேறிய மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லு}ரிக்கான அனுமதியின் போது விஷேட சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றமையை ஆட்சேபித்தே இந்த மனித சங்கிலிப் பேராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அதிகாரி சமர திவாகர தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
2.3.2004
nantri - puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home